செய்திகள்
தொழிலாளி தற்கொலை

பல்லடம் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2020-06-01 11:42 GMT   |   Update On 2020-06-01 11:42 GMT
பல்லடம் அருகே தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை செய்து கெண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம்:

பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சி மாதேஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 34). ஊழியர். இவருக்கு வீரதாரணி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி குடும்பம் நடத்த மோகனசுந்தரம் சிரமப்பட்டார்.இந்நிலையில் வீட்டு செலவுக்காக சம்பவத்தன்று மனைவியின் நகையை விற்றார். இதனால் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் விரக்தியடைந்த மோகனசுந்தரம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News