செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தை உள்பட 6 பேர் குணமாகி வீடு திரும்பினர்

Published On 2020-06-01 11:27 GMT   |   Update On 2020-06-01 11:27 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தை உள்பட 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தேனி:

தேனி மாவட்டத்தில் 109 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களில் போடி, ஓடைப்பட்டியை சேர்ந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த 29-ந்தேதி வரை 86 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி இருந்தனர். இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர், கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் என மொத்தம் 6 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவர்களில் 36 வயது பெண் உள்பட 2 பேர் முத்துலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள். மற்ற இருவரும் பாலக்கோம்பை அருகில் உள்ள கொழிஞ்சிபட்டியை சேர்ந்த தம்பதி ஆவர். அதுபோல், கம்பம் அரசு மருத்துவமனையில் முத்துலாபுரத்தை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை, 5 வயது சிறுவன் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்கள் இருவரும் குணமாகி வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து தேனி மாவட்டத்தில் இதுவரை 92 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 15 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 11 பேர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

3 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும், ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமாகி வீடு திரும்பியவர்களுக்கு பூங்கொத்து, பழக்கூடைகள் கொடுத்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் வழியனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News