செய்திகள்
மிரட்டல்

பாபநாசம் அருகே முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு

Published On 2020-06-01 10:48 GMT   |   Update On 2020-06-01 10:48 GMT
பாபநாசம் அருகே முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பாபநாசம்:

பாபநாசம் அருகே ராஜகிரி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் அஸ்லாம் பாட்சா (வயது 60). இவரை முன் விரோதம் காரணமாக திருச்சி ஆட்டோ பர்வீஸ், ராஜகிரி ரபீக் அகமது ஆகிய இருவரும் சேர்ந்து திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும் அஸ்லாம் பாட்சா பற்றியும், குடும்பத்தை பற்றியும் வாட்ஸ் அப்பில் அவதூறு செய்திகளை குறுஞ்செய்தியாக வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அஸ்லாம் பாட்சா கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் துர்கா ஆட்டோ பர்வீஸ், ரபீக் அகமது ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News