செய்திகள்
தற்கொலை

பெரம்பலூர் அருகே 2 இளம்பெண்கள் உள்பட 3 பேர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2020-06-01 10:27 GMT   |   Update On 2020-06-01 10:27 GMT
பெரம்பலூர் அருகே 2 இளம்பெண்கள் உள்பட 3 பேர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் பள்ளகாளிங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்ராம சாமி. இவரது மகள்ஆனந்தி (வயது22). ராமசாமிவெளி நாட்டில் வேலைபார்த்து வருகிறார். ஆனந்தி சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் ஆனந்தி சொந்த ஊரான பள்ளகாளிங்கராயநல்லூர் கிராமத்திற்கு வந்தார்.

அங்கு வீட்டில் ஆனந்தி சரிவர எந்தவேலையும்செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது தாய் பழனியம்மாள் ஆனந்தியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ஆனந்தி நேற்று வீட்டின் பின்புறம் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து ஆனந்தி உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசுமருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

அதே போல் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மகள் ராதிகா (25) இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்ததாம். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண் டார்.

இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராதிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குன்னம் போலீஸ்சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வயலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி மலர் (53). பெரியசாமி சிலவருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வயலப்பாடி கிராமத்தில் விவசாய பணிக்காக மலர் டிராக்டரில் செல்லும் போது கவிழ்ந்து விபத்துகுள்ளானது.

இதில் மலருக்கு பலத்த அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் தொடர் சிகிச்சை எடுத்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும் உடல் நலக்குறைவாலும் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த மலர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் அய்யாகண்ணு குன்னம் போலீசில் புகார் கொடுத் ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News