செய்திகள்
கைது

திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்- 2 பேர் கைது

Published On 2020-06-01 06:19 GMT   |   Update On 2020-06-01 06:19 GMT
திருவள்ளூர் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், குமரேசன் ஆகியோர் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த கசவநல்லாத்தூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த கடம்பத்தூரை சேர்ந்த கந்தவேல் (வயது 27), கசவநல்லாத்தூரை சேர்ந்த ஸ்ரீதர் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 2 மாட்டு வண்டிகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News