செய்திகள்
தற்கொலை

திருவண்ணாமலை அருகே கூலித்தொழிலாளி தற்கொலை

Published On 2020-05-31 13:17 GMT   |   Update On 2020-05-31 13:17 GMT
திருவண்ணாமலை அருகே கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல், கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த சிவகலை (வயது 27) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு, 1½ ஆண்டாக அவருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று அவர் தனது மனைவியிடம் தனிக்குடித்தனம் போகலாம் வா எனக் கூறி விட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

தச்சம்பட்டு அருகே மேல்புத்தியந்தல் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் விஷத்தை குடித்து விட்டு மயக்கமடைந்து கிடந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பழனிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News