செய்திகள்
கைது

ராமநாதபுரம் அருகே மதுவிற்ற 4 பேர் கைது

Published On 2020-05-31 11:42 GMT   |   Update On 2020-05-31 11:42 GMT
ராமநாதபுரம் அருகே மதுவிற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 52 மதுபாட்டில்கள் மற்றும் மது விற்பனை செய்து வைத்திருந்த ரூ.1,330 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News