செய்திகள்
ஊரடங்கு உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறயதாக 152 பேர் கைது

Published On 2020-05-31 11:28 GMT   |   Update On 2020-05-31 11:30 GMT
விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 142 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 152 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 142 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 152 பேர் கைது செய்யப்பட்டனர். 59 இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

இதுவரை 8477 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10,062 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4044 இருச்சக்கர வாகனங்கள், 72 கார்கள், 88 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News