செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

செக்கானூரணியில் ராணுவ வீரர் வீட்டில் 4½ பவுன் கொள்ளை

Published On 2020-05-31 10:47 GMT   |   Update On 2020-05-31 10:47 GMT
செக்கானூரணியில் ராணுவ வீரர் வீட்டில் 4½ பவுன் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள ஜெகநாதபுரம் ஒத்தவீடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு சொந்தமான வீட்டை அதே பகுதியை சேர்ந்த ஜோதிபாசு என்பவர் பராமரித்து வருகிறார்.

சம்பவத்தன்று மாலை ஜோதிபாசு வீட்டில் மின் விளக்குகளை எறிய விட்டு விட்டு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

அதிர்ச்சியடைந்த ஜோதி பாசு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 2½ பவுன் மோதிரம், 2 பவுன் செயின் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சமையல் பாத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து ரமேஷின் மாமனார் கென்னடி செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரர் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News