செய்திகள்
பெரம்பலூர் அருகே கஞ்சா விற்றவர் கைது
பெரம்பலூர் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகே மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மதனகோபாலபுரம் பாரதிதாசன் நகரை சேர்ந்த உமாமகேஸ்வரனை (வயது 42) போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த ரூ.1,800 மதிப்பிலான 85 கிராம் கஞ்சா, ரூ.3 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.