செய்திகள்
தமிழகத்தில் ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீடிப்பு

ஜூன் 30-ந்தேதி வரை சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும்: தமிழக அரசு அறிவிப்பு

Published On 2020-05-31 02:40 GMT   |   Update On 2020-05-31 02:40 GMT
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஜூன் 1-ந்தேதி முதல் பொதுமுடக்கம் நீடிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
4-வது கட்ட பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது.

மேலும் 8-ந்தேதியில் இருந்து வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், மால்களை திறக்க அனுமதி அளித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடைகள் அப்படியே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News