செய்திகள்
தற்கொலை

குடும்ப பிரச்சினை- கூலி தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2020-05-30 14:36 GMT   |   Update On 2020-05-30 14:36 GMT
மதுரையில் குடும்ப பிரச்சினை காரணமாக கூலி தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:

மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே உள்ள தி.மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி, கூலி தொழிலாளி. இவரது மனைவி கருப்பாயி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ராமசாமி சம்பவத்தன்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் உடல் கருகிய அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தேவன்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கனிராஜா (54). குடும்ப பிரச்சினை காரணமாக இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார்.

இதுதொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News