செய்திகள்
விபத்து

போலீஸ்காரர் கார் மோதி விபத்து- பனியன் தொழிலாளி பலி

Published On 2020-05-30 14:26 GMT   |   Update On 2020-05-30 14:26 GMT
திருப்பூரில் போலீஸ்காரர் கார் மோதி பனியன் தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் சேவூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் பிரபாகரன். இவர் தினமும் காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம். நேற்று இரவு பணிமுடிந்து திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றார். இவரது கார் போயம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பனியன் தொழிலாளியான ராஜேந்திரன் என்பவர் சாலையை கடந்தார். இதில் எதிர்பாராத விதமாக பிரபாகரனின் கார் வேகமாக ராஜேந்திரன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ராஜேந்திரனை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News