செய்திகள்
திருட்டு

பெரம்பலூரில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2020-05-30 14:20 GMT   |   Update On 2020-05-30 14:20 GMT
பெரம்பலூரில் கடையின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் சுந்தரநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது36). இவர் கடந்த சில ஆண்டுகளாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு பெட்டிக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.5000 மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1000 பணத்தை மர்ம நபர்கள் எடுத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த வழியாக நடைபயிற்சி சென்ற ஒருவர் கடையின் பூட்டு உடைந்திருப்பதை அறிந்து பிரபாகரனிடம் தெரிவித்தார். பின்னர் பிரபாகரன் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் கடையின் உள்ளே சென்று மோப்பம் பிடித்து கடையில் இருந்து பெரம்பலூர் பேருந்து நிலையம் வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News