செய்திகள்
கைது

மணல் கடத்திய 4 பேர் கைது

Published On 2020-05-29 12:03 GMT   |   Update On 2020-05-29 12:03 GMT
தா.பேட்டை அருகே மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பேட்டை:

தா.பேட்டை அருகே கண்ணனூர் பகுதியில் ஜெம்புநாதபுரம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்த போது, அதில் காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த கிருஷ்ணராஜ்(வயது 37) கைது செய்யப்பட்டார். இதுபோல் கண்ணனூர் அருகே சவுடு மணல் கடத்தி வந்ததாக சுப்பிரமணியன்(32) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுபோல் திருவெறும்பூர் அருகே குளுமிகரை பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்ததாக கல்லணை பகுதியை சேர்ந்த முருகேசன் (62) உள்பட 2 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News