செய்திகள்
ஊரடங்கை மீறிய 5,602 பேர் மீது வழக்கு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 5,602 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனால் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 5 ஆயிரத்து 602 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 6 ஆயிரத்து 599 பேர் கைது செய்யப்பட்டு, 2 ஆயிரத்து 931 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.