செய்திகள்
தாக்குதல் கைது

சூலூர் அருகே வாலிபரை தாக்கிய தொழிலாளி கைது

Published On 2020-05-29 09:47 GMT   |   Update On 2020-05-29 09:47 GMT
சூலூர் அருகே வாலிபரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர்:

சூலூர் அருகே உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் கருப்பையா(30). சம்பவத்தன்று கருப்பையாவின் மனைவி காடம்பாடி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் அவரை கிண்டல் செய்தார்.

இதுகுறித்து தட்டி கேட்ட கருப்பையாவை, கணேசன் தாக்கினார். இதுகுறித்து கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News