செய்திகள்
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்

Published On 2020-05-29 02:21 GMT   |   Update On 2020-05-29 02:21 GMT
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 10,548 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 145-ஆக உள்ளது.
 
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது. 6,304 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 106-ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பு ஒரு புறம் இருக்க தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் மருத்துவமனைகளில் இருந்து தப்பியோடுவதும், தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தப்பியோடிய சேத்துப்பட்டை சேர்ந்த 63 வயதான ஆண் நபரை தேடும் பணியில் சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News