செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேர் ‘டிஸ்சார்ஜ்’

Published On 2020-05-28 13:18 GMT   |   Update On 2020-05-28 13:18 GMT
கரூர் அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேர் பூரண குணமடைந்ததையடுத்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரூர்:

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 42 பேர் கரூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, குணம் அடைந்து வீடு திரும்பினர். பின்னர் கடந்த 1-ந்தேதி முதல் சென்னை மற்றும் மகாராஷ்டிரத்தில் இருந்து வந்த 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் 24 பேர் படிப்படியாக குணம் அடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து நேற்று 9 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தனர். இதையடுத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அவர்களை மருத்துவக்கல்லூரி முதல்வர் தேரணிராஜன், மருத்துவர்கள், செவிலியர்கள் பழங்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

தற்போது 4 பேர் மட்டுமே மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.


Tags:    

Similar News