செய்திகள்
2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- அதிமுக நிர்வாகி கைது
தேனி மாவட்டத்தில் 2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனி மாவட்டம் கோம்பை கிராமசாவடி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 61). அ.தி.மு.க. பேரூர் நகர பொருளாளராக உள்ளார். நேற்று அதே பகுதியை சேர்ந்த 2 வயது பெண் குழந்தையை பிஸ்கட் வாங்கி தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்றார்.
பின்னர் மீண்டும் அவரது வீட்டில் கொண்டு வந்து விட்டார். சிறுமியின் தாய் தனது மகளை குளிப்பாட்டிய போது உடலில் காயங்கள் இருந்தது. அதிர்ச்சியடைந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் கணேசன் சிறுமியை பாலியல் தொல்லை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கணேசனை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கோம்பை கிராமசாவடி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 61). அ.தி.மு.க. பேரூர் நகர பொருளாளராக உள்ளார். நேற்று அதே பகுதியை சேர்ந்த 2 வயது பெண் குழந்தையை பிஸ்கட் வாங்கி தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்றார்.
பின்னர் மீண்டும் அவரது வீட்டில் கொண்டு வந்து விட்டார். சிறுமியின் தாய் தனது மகளை குளிப்பாட்டிய போது உடலில் காயங்கள் இருந்தது. அதிர்ச்சியடைந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் கணேசன் சிறுமியை பாலியல் தொல்லை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கணேசனை போலீசார் கைது செய்தனர்.