செய்திகள்
சிறப்பு ரெயில்

கோவை, திருப்பூரில் இருந்து மேலும் 4 சிறப்பு ரெயில்கள்

Published On 2020-05-28 08:44 GMT   |   Update On 2020-05-28 08:44 GMT
கோவை, திருப்பூரில் இருந்து மேலும் 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில்கள் மூலம் 4 ஆயிரத்து 800 பேர் பயணம் செய்ய உள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூரில் மாவட்டத்தில் இருந்து இதுவரை 14 ரெயில்கள் மூலம் 30 ஆயிரம் பேர் வட மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். இன்று திருப்பூரில் இருந்து அசாம், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மேலும் 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில்கள் மூலம் 4 ஆயிரத்து 800 பேர் பயணம் செய்ய உள்ளனர். மதியம் 2 மணி முதல் இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று மாலை 5 மணியளவில் ஜார்க்கண்டுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதில் நீலகிரி, அன்னூர், மேட்டுப்பாளையத்தில் தங்கி வேலை பார்த்து வரும் 1321 பேர் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

Tags:    

Similar News