செய்திகள்
பாப்பாநாடு அருகே சிறுமியை காரில் கடத்தி சென்ற வாலிபர் கைது
பாப்பாநாடு அருகே சிறுமியை காரில் கடத்தி சென்ற வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா பாப்பாநாடு போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமம் சேனாதிபதி தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தியின் இளைய மகளை சம்பவத்தன்று பாப்பாநாடு அருகே உள்ள வில்வாடி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர், அவரது தம்பி வீரசேகர் ஆகிய 2 பேர் ஒரு காரில் வந்து சூர்யாவை கடத்திச் சென்றனர். அவர் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியையும் பறித்தனர்.
இது குறித்து பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி ஒரத்தநாடு நீதிபதி முன்பாக ஆஜர் செய்து சூர்யாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சூர்யாவை கடத்திச் சென்று ராஜசேகர் கற்பழித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேககித்தனர். அவர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.
நேற்று காலை ராஜசேகரை பாப்பாநாடு போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்கை பதிவு செய்து ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரது தம்பி வீரசேகரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா பாப்பாநாடு போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமம் சேனாதிபதி தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தியின் இளைய மகளை சம்பவத்தன்று பாப்பாநாடு அருகே உள்ள வில்வாடி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர், அவரது தம்பி வீரசேகர் ஆகிய 2 பேர் ஒரு காரில் வந்து சூர்யாவை கடத்திச் சென்றனர். அவர் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியையும் பறித்தனர்.
இது குறித்து பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி ஒரத்தநாடு நீதிபதி முன்பாக ஆஜர் செய்து சூர்யாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சூர்யாவை கடத்திச் சென்று ராஜசேகர் கற்பழித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேககித்தனர். அவர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.
நேற்று காலை ராஜசேகரை பாப்பாநாடு போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்கை பதிவு செய்து ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரது தம்பி வீரசேகரை வலைவீசி தேடி வருகிறார்கள்.