செய்திகள்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை

கொரோனாவுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 4 பேர் உயிரிழப்பு

Published On 2020-05-28 04:14 GMT   |   Update On 2020-05-28 04:14 GMT
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 9,909 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 133-ஆக உள்ளது.
 
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,203 ஆக அதிகரித்துள்ளது. 5,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95-ஆக உள்ளது.

இந்நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கே.கே.நகர், திருவொற்றியூர், செங்குன்றத்தை சேர்ந்த 3 ஆண்கள் மற்றும் புளியந்தோப்பை சேர்ந்த முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News