செய்திகள்
கைது

விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது- அழகிகள் மீட்பு

Published On 2020-05-27 14:25 GMT   |   Update On 2020-05-27 14:25 GMT
கோவை துடியலூரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கோவை:

கோவை துடியலூர் போலீசாருக்கு சரவணம்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சாதாரண உடையில் அங்கு சென்றனர். அப்போது ஒரு அறையில் 2 வாலிபர்கள் அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபர்கள் ஒடிசாவை சேர்ந்த குப்திஸ்வரன் மற்றும் விருதுநகரை சேர்ந்த மகேந்திரன் என்பதும் இவர்கள் பெங்களூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணையும், கோவையை சேர்ந்த 37 வயது இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். குப்திஸ்வரன் மற்றும் மகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு உதவியாக இருந்த சிக்கந்தர் பாஷா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News