செய்திகள்
விடைத்தாள் திருத்தும் பணி- திருச்சி மாவட்டத்தில் இன்று 13 மையங்களில் தொடங்கியது
திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது.
திருச்சி:
திருச்சி கல்வி மாவட்டத்தில் ஆர்.சி.மேல் நிலைப்பள்ளியை பிரதான மையமாக கொண்டு 7 துணை விடைத்தாள் திருத்தும் மையங்களும், மணப்பாறை கல்வி மாவட்டத்தில் ஒரு துணை விடைத்தாள் திருத்தும் மையம், லால்குடி கல்வி மாவட்டத்தில் மண்ணச்ச நல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பிரதான மையமாக கொண்டு ஒரு துணை விடைத்தாள் திருத்தும் மையம்,
முசிறி கல்வி மாவட்டத்தில் முசிறி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியை பிரதான மையமாக கொண்டு ஒரு துணை விடைத்தாள் திருத்தும் மையம் என 13 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் 270 முதன்மை தேர்வாளர்கள், 270 கூர்ந்தாய்வு பணி மேற்கொள்வோர், 1,620 உதவி தேர்வாளர்கள் பணிய மர்த்தப்பட்டுள்ளனர்.
திருச்சி கல்வி மாவட்டத்திற்கு வருகை தரும் ஆசிரியர்களுக்கு வசதியாக துவாக்குடி, சோமரசம் பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து தலா 2 பேருந்துகளும், நம்பர் 1 டோல்கேட்டிலிருந்து 1 பேருந்தும் இயக்கப்பட்டது.
முசிறி கல்வி மாவட்டத்தில் முசிறி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியை பிரதான மையமாக கொண்டு ஒரு துணை விடைத்தாள் திருத்தும் மையம் என 13 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் 270 முதன்மை தேர்வாளர்கள், 270 கூர்ந்தாய்வு பணி மேற்கொள்வோர், 1,620 உதவி தேர்வாளர்கள் பணிய மர்த்தப்பட்டுள்ளனர்.
திருச்சி கல்வி மாவட்டத்திற்கு வருகை தரும் ஆசிரியர்களுக்கு வசதியாக துவாக்குடி, சோமரசம் பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து தலா 2 பேருந்துகளும், நம்பர் 1 டோல்கேட்டிலிருந்து 1 பேருந்தும் இயக்கப்பட்டது.