செய்திகள்
புழல் சிறை

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை- தண்டனை பெற்ற கைதி புழல் சிறையில் தற்கொலை

Published On 2020-05-27 09:59 GMT   |   Update On 2020-05-27 09:59 GMT
சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற கைதி பழனி, சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை:

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2018ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவலாளி பழனி, பிளம்பர் சுரேஷ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை முடிவில் பழனி உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சாகும்வரை அவர்கள் சிறையில் இருக்க உத்தரவிடப்பட்டது. கைதிகள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி பழனி, இன்று தற்கொலை செய்துகொண்டார். தனது லுங்கியால் சிறையில் உள்ள அறையில் தூக்கு போட்டு இறந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags:    

Similar News