செய்திகள்
விபத்து பலி

திருப்பூர் அருகே மொபட் மீது கார் மோதல்: கணவன்-மனைவி பலி

Published On 2020-05-27 09:23 GMT   |   Update On 2020-05-27 09:23 GMT
திருப்பூர் அருகே விபத்தில் கணவன்-மனைவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனியை சேர்ந்தவர் ஷேக் முகைதீன் (50). இவரது மனைவி ரம்ஜான் பீபி (45).இவர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள மகளை பார்ப்பதற்காக மொபட்டில் திருப்பூரில இருந்து சத்தியமங்கலத்துக்கு வந்தனர்.

புஞ்சை புளியம்பட்டியை அடுத்துள்ள விண்ணப்ப பள்ளி அரசு மறு வாழ்வு இல்லம் அருகே வந்த போது எதிரே வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த ஷேக் முகைதீன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ரம்ஜான் பீபி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்தார்.

Tags:    

Similar News