செய்திகள்
கைது

தாராபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

Published On 2020-05-27 08:03 GMT   |   Update On 2020-05-27 08:03 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (32). இவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை, தனது வீட்டிற்கு அழைத்து சென்று அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அழுது கொண்டே சென்று தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவரது தாயார் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மகளிர் போலீசார் விசாரணை நடத்தி பூபதியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News