செய்திகள்
மதுரை அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை நிலையூர் பகுதியை சேர்ந்தவர் சூரியா(வயது 19). இவர் வடக்கு மாசிவீதியில் உள்ள மருந்து விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை மோட்டார் சைக்கிளில் ஏ.வி.பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் சரக்கு ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சூரியா பரிதாபமாக இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய திருச்சியை சேர்ந்த டிரைவர் சதீசை கைது செய்தனர்.