செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 13 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துவாக்குடி:
திருவெறும்பூரை அடுத்த நடராசபுரம் கீழத்தெரு தென்னந்தோப்பு பகுதியில் அந்த ஊராட்சியை சேர்ந்த இளைஞர்கள் 13 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்அழகன் தலைமையிலான போலீசார் அவர்களை விரட்டி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.14,850 மற்றும் 10 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.