செய்திகள்
கோப்பு படம்

மதுரை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தாக்கிய மனைவி கைது

Published On 2020-05-26 12:01 GMT   |   Update On 2020-05-26 12:01 GMT
மதுரை அருகே கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை தாக்கிய மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி ஜோதிகா (வயது 27).

ஜோதிகாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜய ராமன் (24) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஊர் பஞ்சாயத்து முன்னிலையில் கருப்பையா தனது மனைவி ஜோதிகாவை விவாகரத்து செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று கருப்பையா தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த போது ஜோதிகா மற்றும் விஜயராமன் உள்ளிட்ட 4 பேர் கருப்பையாவையும், அவரது சகோதரர் மீனாட்சி சுந்தரத்தையும் உருட்டுக் கட்டை, கம்பி ஆகியவற்றால் தாக்கினர்.

இதில் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக கருப்பையாவின் தம்பி குமார் விக்கிரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி வேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து கருப்பையாவின் மனைவி ஜோதிகா, கள்ளக்காதலன் விஜயராமன் மற்றும் சின்னசாமி (45), ஆதம்மாள் (41) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News