செய்திகள்
நீரில் மூழ்கி பலி

திண்டுக்கல் அருகே மது போதையில் கிணற்றில் குளித்த 2 பேர் பலி

Published On 2020-05-26 09:45 GMT   |   Update On 2020-05-26 09:45 GMT
திண்டுக்கல் அருகே குடி போதையில் கிணற்றில் குளித்த 2 பேர் பலியாகினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே ராஜக்காபட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலுச்சாமி (38) இவர்கள் 2 பேரும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு மரக்கடையில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். சம்பவத்தன்று ராஜக்காபட்டி பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க மது அருந்தி விட்டு சென்றனர்.

அப்போது திடீரென நீரில் மூழ்கி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News