செய்திகள்
தஞ்சை அருகே கார் மோதி தொழிலாளி பலி
தஞ்சை அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள அம்மன்பேட்டையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50) தொழிலாளி.
இவர் தனது மகன் சந்தோசுடன் (19) தஞ்சையில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். தஞ்சை அடுத்த மணக்கரம்பை அருகே வந்தபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ரவிச்சந்திரன், சந்தோசை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ரவிச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.சந்தோஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.