செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே இருதரப்பினர் மோதல்- 7 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே இருதரப்பினர் மோதல் சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளுந்தாண்டார் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 37). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த மாயோஸ்வரன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இருதரப்பினரும் ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டி தாக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இருதரப்பை சேர்ந்த 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தயாளன்(30), வடமலை(57), சிவகுரு(37) மற்றும் மாயோஸ்வரன்(30), படையப்பா(22), அஜித்குமார்(23), வைத்தீஸ்வரன்(23) ஆகிய 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.