செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Published On 2020-05-26 06:47 GMT   |   Update On 2020-05-26 06:47 GMT
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திற்காக 8.6.2020 முதல் 28.02.2021 வரை நாள் ஒன்றுக்கு 850 கனஅடி/விநாடிக்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் I மற்றும் II அணைகளிலிருந்து தண்ணீரை திறந்து விட ஆணையிடப்பட்டுள்ளது.

இதனால் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனப் பகுதிகளின் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும் விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 
Tags:    

Similar News