செய்திகள்
கைது

திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்: வாலிபர் கைது

Published On 2020-05-26 06:30 GMT   |   Update On 2020-05-26 06:30 GMT
திருவள்ளூர் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் போலீசார் நேற்று முன்தினம் ஏகாட்டூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஏகாட்டூர் மீனாட்சி நகரை சேர்ந்த செபஸ்டின் (வயது 28) என்பவர் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News