செய்திகள்
தேனி அருகே மதுவிற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வடபுதுப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ததாக டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த சின்னவர் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.