செய்திகள்
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
மன்னார்குடி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மன்னார்குடி:
மன்னார்குடியை அடுத்த நெடுவாக்கோட்டை பகுதியில் நேற்று மன்னார்குடி தாசில்தார் கார்த்திக் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்ய முயன்றார். அப்போது டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் லாரியை சோதனை செய்தபோது, அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.