செய்திகள்
மிரட்டல்

பஞ்சாயத்து செயல் அலுவலருக்கு மிரட்டல்- 4 பேர் கைது

Published On 2020-05-25 11:55 GMT   |   Update On 2020-05-25 11:55 GMT
பஞ்சாயத்து செயல் அலுவலருக்கு மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம்:

ஆலங்குளம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ரவி மனைவி பாக்கியம் (வயது 41). இவர் பொது வழிப்பாதையை ஜல்லிக்கற்களை போட்டு மறித்து யாரும் செல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த யோசேப்பு என்பவரை தனது உறவினர்களுடன் சேர்ந்து பாக்கியம் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து யோசேப்பு ஆலங்குளம் பேருராட்சி செயல் அலுவலர் மற்றும் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணைக்கு சென்ற செயல் அலுவலர் கணேசனை, பாக்கியம் மற்றும் அவரது உறவினர்கள் ரவி (43), பாப்புத்துரை மனைவி தனலட்சுமி, ஜெயராஜ் (41) ஆகியோர் பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டினர். இதுகுறித்த புகாரின் பேரில் பாக்கியம் உள்ளிட்ட 4 பேரையும் ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News