செய்திகள்
பொள்ளாச்சியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- தாயின் கள்ளக்காதலன் கைது
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38). இவர் கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் திருமணம் செய்யாமல் வசித்து வந்தார்.
அந்த பெண்ணுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார். 14 வயதான 2-வது மகள் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் முத்துக்குமார் மகள் முறையான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தாய் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் முத்துக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38). இவர் கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் திருமணம் செய்யாமல் வசித்து வந்தார்.
அந்த பெண்ணுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார். 14 வயதான 2-வது மகள் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் முத்துக்குமார் மகள் முறையான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தாய் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் முத்துக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.