செய்திகள்
கைது

பொள்ளாச்சியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- தாயின் கள்ளக்காதலன் கைது

Published On 2020-05-25 09:01 GMT   |   Update On 2020-05-25 09:01 GMT
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38). இவர் கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் திருமணம் செய்யாமல் வசித்து வந்தார்.

அந்த பெண்ணுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார். 14 வயதான 2-வது மகள் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் முத்துக்குமார் மகள் முறையான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தாய் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் முத்துக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News