செய்திகள்
இன்று மாலை வீடு திரும்புகிறார் ஓபிஎஸ்- மருத்துவமனை
தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று மாலை வீடு திரும்புவார் என்று தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இது வழக்கமான பரிசோதனை என்றும், மருத்துவ பரிசோதனை முடிந்து இன்று மாலையே வீடு திரும்புவார் என்றும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சிகிச்சை முடிந்து இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை வந்த ஓ பன்னீர் செல்வத்துக்கு இன்று முழு உடல் பரிசோதனை நடந்தது. ஓ.பன்னீர் செல்வம் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஓ.பன்னீர் செல்வத்திடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார். பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் ஓ.பன்னீர் செல்வத்திடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் சென்றிருந்தார்.
தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இது வழக்கமான பரிசோதனை என்றும், மருத்துவ பரிசோதனை முடிந்து இன்று மாலையே வீடு திரும்புவார் என்றும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சிகிச்சை முடிந்து இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை வந்த ஓ பன்னீர் செல்வத்துக்கு இன்று முழு உடல் பரிசோதனை நடந்தது. ஓ.பன்னீர் செல்வம் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஓ.பன்னீர் செல்வத்திடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார். பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் ஓ.பன்னீர் செல்வத்திடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் சென்றிருந்தார்.