செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஓபிஎஸ் உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தார் முதலமைச்சர்

Published On 2020-05-25 07:14 GMT   |   Update On 2020-05-25 07:14 GMT
சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திடம் உடல் நலம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விசாரித்தார்.
சென்னை:

தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இது வழக்கமான பரிசோதனை என்றும், மருத்துவ பரிசோதனை முடிந்து இன்று மாலையே வீடு திரும்புவார் என்றும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் சென்றிருந்தார்.
Tags:    

Similar News