செய்திகள்
தற்கொலை

தென்காசி அருகே முதியவர் தற்கொலை

Published On 2020-05-24 14:47 GMT   |   Update On 2020-05-24 14:47 GMT
தென்காசி அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:

தென்காசி மாவட்டம் சிவகிரி சிவராமலிங்காபுரம் ஓடை தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 65). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். பொன்னுசாமிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த திராவகத்தை குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.

உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பொன்னுசாமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News