செய்திகள்
வேலையா

சுரண்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

Published On 2020-05-20 12:56 GMT   |   Update On 2020-05-20 12:56 GMT
சுரண்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுரண்டை:

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள இடையர்தவணை மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலையா (வயது 65), விவசாயி. சுரண்டை பகுதியில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறைக்காற்று வீசியது. அப்போது வேலையா மாலை 5 மணிக்கு தனது தோட்டத்திற்கு நடந்து சென்றார்.

அப்போது அவர் அங்கு அறுந்து கிடந்த மின்சார வயரை கவனிக்காமல் எதிர்பாராதவிதமாக மிதித்தார். இதில் வேலையா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை அறிந்ததும் அவரது குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர். அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இதுகுறித்த தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார். வேலையாவுக்கு பிச்சம்மாள் என்ற மனைவியும், கோட்டைச்சாமி (47) என்ற மகனும் உள்ளனர். கோட்டைச்சாமி ஆடு, மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News