செய்திகள்
கைது

பல்லடத்தில் சூதாடிய 7 பேர் கைது

Published On 2020-05-20 10:33 GMT   |   Update On 2020-05-20 10:33 GMT
பல்லடத்தில் சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:

பல்லடம் அருகே கரைப்புதூரில் இருந்து எம்.ஏ.நகர் செல்லும் ரோடு குட்டை பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கமல்தாஸ் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த முருங்கை பாளையத்தைச் சேர்ந்த முருகன், தங்கராஜ், கேசவமூர்த்தி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.36,200 பறிமுதல் செய்யப்பட்டது. 
Tags:    

Similar News