செய்திகள்
தீ விபத்து

வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் தீ விபத்து

Published On 2020-05-19 09:22 GMT   |   Update On 2020-05-19 09:22 GMT
வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தனர்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே உள்ள பழனிகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(40). இவர் வீரசோழபுரம் அருகே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நூல் மில் நடத்தி வருகின்றார். 

இந்த மில்லில் 5 எந்திரம் போட்டுள்ளார். மில்லில் ஒடிசா, பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலத்தை சேர்ந்த 60 தொழிலாளர்களும். வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 25 தொழிலாளர்கள் மொத்தம் 85 பேர் வேலை செய்து வருகின்றனர். தற்போது தடை உத்தரவு காரணத்தால் கடந்த 40 நாட்களாக மில் இயங்கவில்லை, கடந்த ஒரு வாரமாக குறைவான தொழிலாளர்களை வைத்து 3 எந்திரத்தை மட்டும் இயக்கி வந்தனர். நேற்று தான் 5 எந்திரத்தை இயக்கி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை திடீர் என மில்லில் பஞ்சு போட்டு வைத்திருந்த இடத்தில் தீ பிடித்து எரிந்தது. இதை கவனித்த தொழிலாளர்கள், உடனே காங்கயம், வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே இரண்டு தீயணைப்பு வாகனங்களும் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். ஜேசிபி எந்திரம் மூலம் பஞ்சுகளை அப்புறபடுத்தினர். பஞ்சு மற்றும் புளோ ரூம் எந்திரம் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு சுமார் 40 லட்சம் இருக்கலாம் என்கின்றனர். உடனே மின் இணைப்பை துண்டித்து விட்டனர்,

Tags:    

Similar News