செய்திகள்
தொற்று எண்ணிக்கையை குறைக்க பரிசோதனைகள் குறைப்பா? - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
கொரோனா தொற்று பரிசோதனைகளைக் குறைப்பதன் மூலம், நோய்த் தொற்று எண்ணிக்கையை குறைத்து காட்ட, தமிழக அரசு முயற்சி செய்கிறது என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மே 7-ம் தேதி 14 ஆயிரத்து 102 என்கிற அளவில் இருந்த பரிசோதனை எண்ணிக்கை, தற்போது 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டு 8 ஆயிரத்து 270 ஆக உள்ளது.
பரிசோதனைகளைக் குறைக்க கூடாது என்று மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் பரிசோதனைகளை குறைப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.