செய்திகள்
தாய்க்குலம் விரைவில் தீர்ப்பு சொல்லும்- கமல்ஹாசன்
டாஸ்மாக் திறப்புக்கான தீர்ப்பை தாய்க்குலம் மிகவரைவில் சொல்லும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் ஊரடங்கிற்கு இடையே சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கடந்த 17-ந்தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என ஐகோர்ட்டில் மனுத்தால் செய்யப்பட்டு, பின்னர் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கியதுடன் இது தொடர்பான வழக்கை 8 வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதையடுத்து இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன.
“மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது. திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில். அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டு தப்பிக்க முடியாது”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கிற்கு இடையே சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கடந்த 17-ந்தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என ஐகோர்ட்டில் மனுத்தால் செய்யப்பட்டு, பின்னர் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கியதுடன் இது தொடர்பான வழக்கை 8 வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதையடுத்து இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன.
டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
“மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது. திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில். அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டு தப்பிக்க முடியாது”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.