செய்திகள்
சிவகாசியில் கடந்த 3 நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்தது.
சிவகாசி:
சிவகாசியில் கடந்த 3 நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை ¾ மணி நேரம் இடியுடன் பலத்த மழை பெய்தது.
சிவகாசி, திருத்தங்கல் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களிலும் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசியது.