செய்திகள்
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு
திருப்பூர் அருகே தேங்காய் பறித்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்:
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் சேட் (வயது 26). இவர் திருப்பூர் குளத்துப்புதூரில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் தங்கி வேலை செய்து வந்தார். ஊரடங்கு காரணமாக சாயப்பட்டறை செயல்படவில்லை. இதனால் அந்த நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள அறையில் சேட் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அந்த வளாகத்தில் நின்ற தென்னைமரத்தில் இருந்து தேங்காயை இரும்பு கம்பியால் கொக்கி போட்டு பறித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பி அருகில் உள்ள மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி சேட் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் சேட் (வயது 26). இவர் திருப்பூர் குளத்துப்புதூரில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் தங்கி வேலை செய்து வந்தார். ஊரடங்கு காரணமாக சாயப்பட்டறை செயல்படவில்லை. இதனால் அந்த நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள அறையில் சேட் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அந்த வளாகத்தில் நின்ற தென்னைமரத்தில் இருந்து தேங்காயை இரும்பு கம்பியால் கொக்கி போட்டு பறித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பி அருகில் உள்ள மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி சேட் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.